பிரபலமானவர்கள் தங்கள் மரணத்தின் போது பேசிய கடைசி வார்த்தைகள் இவை.. 
இந்த வார ஆனந்த விகடனில் வெளியானவை இதோ உங்களுக்காக... 
மகாத்மா காந்தி: 
'ஹே ராம் !' 
தாமஸ் ஆல்வா எடிசன்: 
"விளக்கை எரியவிடுங்கள் என் ஆவி பிரியும்போது வெளிச்சம் இருக்கட்டும்!" 
பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்: 
"இறக்கும் மனிதனால் எதையும் எளிதாகச் செய்ய முடியாது!" 
பாபர் (மொகலாயப் பேரரசர்): 
தன் மகன் ஹுமாயூனிடம்... 
"இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே!" 
டயானா: 
"கடவுளே! என்ன நடந்தது எனக்கு?" 
மேரி க்யூரி: 
"என்னைத் தனிமையில் இருக்க விடுங்கள்!" 
கிளியோபாட்ரா: 
பூ நாகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, "ஆஹா.. இதோ.. என் முடிவு இங்கே இருக்கிறது!" 
ஆன் (இங்கிலாந்து ராணி): 
தன் உதவியாளரிடம், 
"மக்களின் நன்மைக்காக கருவூலப் பணத்தைப் பயன்படுத்துங்கள்!" 
நெப்போலியன்: 
"பிரான்ஸ்.. ஆர்மி... ஜோஸ்பின்!"
வின்ஸ்டன் சர்ச்சில்: 
"எனக்கு எல்லாமே போர் அடிக்குது!" இந்த வார்த்தைகளுக்குப் பின் கோமாவுக்குச் சென்று 9 நாட்களுக்குப் பின் மரணத்தைத் தழுவினார். 
ஜூலியஸ் சீஸர்: 
"யூ டூ புரூட்டஸ்?" 
பெருந்தலைவர் காமராஜர்: 
தன் உதவியாளரிடம், "வைரவா விளக்கை அணைத்து விடு!" 
 
 
 
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.